மேலமருத்துவக்குடியில் குடும்ப தகராறில் அண்ணனை கொன்ற தம்பி.

2261பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள மேலமருத்துவகுடி கிராமம், எருத்துக்கார தெருவை சேர்ந்தவர் கோபு. இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ராஜா (எ) பழனிவேல் (34), கோவிந்தராஜ் (30) மற்றும் அரவிந்தன் (28) என்ற கொத்தனார் வேலை செய்யும் மூன்று மகன்கள் உள்ளனர். இதில் கோவிந்தராஜ் என்பவருக்கு மட்டும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் மது போதையில் வீட்டிற்கு வந்த அரவிந்தன், இவரது மனைவி மகாலெட்சுமியிடம் (25) குடும்ப விஷயமாக சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியதால் அரவிந்தனின் மூத்த அண்ணன் பழனிவேல் தம்பதியர் இருவரையும் சமரசம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அரவிந்தனுக்கும், பழனிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்தன் வீட்டிலிருந்த கத்தியால் பழனிவேலின் இடது பக்க மார்பில் பலமாக குத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி