வாக்கிங் சென்ற ஓய்வு பெற்ற எஸ்.ஐ மயங்கி விழுந்து சாவு

2929பார்த்தது
வாக்கிங் சென்ற ஓய்வு பெற்ற எஸ்.ஐ மயங்கி விழுந்து சாவு
தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாட்டை அடுத்துள்ள ஈச்சங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது75). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் சம்பவத்தன்று மாலை ஈச்சங்கோட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடை பயிற்சி சென்றார். அப்போது சின்னையன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னையன் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி