தஞ்சாவூரில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
தஞ்சாவூரில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மத்திய மாவட்ட அ. தி. மு. க. செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா. சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

தமிழகத்தில் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி 'தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தஞ்சை மத்திய மாவட்டம் அ. தி. மு. க. சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10. 30 மணிக்கு தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான ரா. காமராஜ் எம். எல். ஏ. , கொள்ளை பரப்பு துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாபா. பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர். எனவே நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற-சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி