மதுக்கூர் வட்டாரத்தில் மானிய விலையில் உளுந்து விதைகள்

85பார்த்தது
மதுக்கூர் வட்டாரத்தில் மானிய விலையில் உளுந்து விதைகள்
மதுக்கூர் வட்டாரத்தில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித் துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

வேளாண்மை துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி திட்டம் தஞ்சை வேளாண் இணை இயக்குனர் வழிகாட்டுதலின்
கீழ் நெல், உளுந்து மற்றும் சிறு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி பரப்பு இலக்கு வழங்கப்பட்டு, அதற்கேற்ற உற்பத்தி
இலக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி ஆணையரின் உத்தரவுப்படி வட்டார வாரியாக கோடை பயிர் சாகுபடிக்கு மட்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்துக்கான இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுக்கூர் வட்டாரத்தில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 250 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது விதை ரூ. 48 மானியத்தில் உளுந்து விதை திரவ உயிர் உரத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. கிராம வாரியாக வேளாண் உதவி அலுவலர்கள் குறைந்த அளவு நீரில் குறைந்த காலத்தில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உளுந்து பயிர் சாகுபடியை ஊக்குவித்து வருகின்றனர். எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் கிலோ ரூ. 95 முதல் 98 வரை விலை யில் கொள்முதல் செய்யப் படும் லாபகரமான உளுந்து சாகுபடியை மேற்கொண்டு அதிக வருமானம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி