பாபநாசத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்கள் வழங்கப்பட்டது

58பார்த்தது
தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்ணில் உயிர் கரிம சத்துக்களையும் பயிர் மகசூலை அதிகரிக்க விவசாயிகளை பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டமான  தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரங்கள் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்களை வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மறறும் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் ஆகியவற்றையும் வழங்கினார்.
முன்னதாக, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனக்கூடம் ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து இத்துறைகளின் அலுவலர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு விளக்கம் அளித்தனர்.
பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் மோகன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என். நாசர், உட்பட
வேளாண், தோட்டக்கலைத்துறை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளிட்ட துறைகளின் பணியாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி