சுள்ளான்ஆறு தடுப்பு சுவர் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

83பார்த்தது
தஞ்சை
மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் வேம்பகுடி ஊராட்சி புரசக்குடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் சுள்ளான் ஆற்றங்கரையில் தடுப்பு சுவருக்காக சாலையோரம் பள்ளம்தோண்டப் பட்ட நிலையில் நான்கு மாதத்திற்கு மேல் ஆகியும் பணிகள் நடைபெறாமல் பணிகள் துவங்கிய நிலையிலேயே பணி முடிக்கப்படாமல் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளதால் இந்த சாலை வழியாக செல்லும் புரசகுடி கிராம மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும இதர பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அரசு கிராம மக்களின் சிரமத்தை உணர்ந்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி