மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு

51பார்த்தது
மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு
Stop
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டை 
புதுதெருவில் வசித்து வந்தவர் சிங்காரவேலு வயது 75 விவசாய கூலி தொழிலாளி. இவர்  பண்டாரவடைக்கு வந்துவிட்டு நடந்து தேவராயன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் அதிவேகமாக  மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவராயன்பேட்டை ராஜேஷ் என்ற வாலிபர்  சிங்காரவேலு மீது மோதி விட்டார். இதில் சிங்காரவேலு பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சிங்காரவேலின் மகன் நல்லையன் வயது 40 என்பவர் கொடுத்த புகாரரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த ராஜேஷும் படுகாயம் அடைந்து தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார் விபத்தில் உயிரிழந்த சிங்காரவேலு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி