அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

1080பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாநடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கு. தமிழரசு தலைமை வகித்தார். கணினி பொறியியல் விரிவுரையாளர் சிந்து வரவேற்று பேசினார். முதல்வர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். அலுவலக கண்காணிப்பாளர் மருது பாண்டியன் அறிமுக உரை நிகழ்த்தினார். விழாவில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். உடற்கல்வி இயக்குனர் சுவாமிநாதன் விழா நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் ஆசிரியர்பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கணினி பொறியியல் விரிவுரையாளர் முனைவர் ஜெயபாரதி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி