அரசு மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செம்டம்பர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் ஒப்பந்தத்தில் சிறு முறைகேடுகள் கூட நடக்காத வகையில், துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தால் ரூ.10 திரும்ப வழங்கப்படும்.