தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரகேகர் ராவ் மகள் கவிதாவை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானக் கொள்ளை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்தினர். நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையை கண்டித்து தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.