சிறுமியின் கால் முறிவு - ஓடிச்சென்ற கும்பகோணம் எம்எல்ஏ

5802பார்த்தது
கும்பகோணம் தொகுதி, நீலத்தநல்லூர் ஊராட்சி, சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி இவர்களது 4 வயது மகள் தர்ஷிகாவின் மீது, அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ததால், அச்சிறுமிக்கு கால் எழும்பு முடிவு ஏற்பட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த தகவல் கிடைத்தவுடன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

மேலும், நிலைய மருத்துவரிடம் சிறுமிக்கு தகுந்த சிகிச்சை அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தம் செய்ய அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். நிகழ்வில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், நிலைய மருத்துவர் பிரபாகர் அவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி