சென்னை எழும்பூரை சேர்ந்த ஜோஷ்வா என்ற விலங்கு நல ஆர்வலர் பகீர் குற்றசாட்டு ஒன்றை கூறியுள்ளார். ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வரும் இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் வந்து தெருவில் இருக்கும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்றதாக கூறியுள்ளார். மேலும் அவரை விரட்டி பிடித்து விசாரித்தபோது 100 ரூபாய் கொடுத்தால் பூனையை தருகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் அவர் ஒருவர் மட்டும் சாப்பிடுவார் என்றல் ஒரு பூனை போதும் எதற்கு இத்தனை பூனையை பிடிக்க வேண்டும்? இதனை உணவகங்களில் விற்று பணம் சம்பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.