தென்காசி மாவட்டத்தில் துவங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

76பார்த்தது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு இன்று (செப்.,14) காலை துவங்கி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மட்டும் 20,870 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக தென்காசி மாவட்டத்தில் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மையத்தில் 13,166 பேர்களும், சங்கரன்கோவில் மையத்தில் 7,704 பேர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் தேர்வினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேர்வர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வை எழுதி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி