தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான நுகர்வோர் மற்றும் பயனீட்டாளர்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கிய நிலையில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்