கீழப்பாவூர், அச்சன்புதூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

80பார்த்தது
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ப. திருமலைக் குமாரசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:

கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் உப மின் நிலையங்களில் 18. 09. 2024 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர், வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி