சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு 192 பேருடன் நேற்று (மார்ச் 9) பகலில் ஒரு விமானம் வந்துள்ளது. அந்த விமானம், தரையிறங்கும் போது, வால் பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதில், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமான பாதுகாப்பு ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. வானில் பறக்க தகுதியானது என்ற சான்று பெற்ற பிறகே, விமானத்தை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.