ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரை (51), வெட்டிப் படுகொலை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு, பணம் பெற்றவரின் விரலை, பாஜக நிர்வாகி வெட்டியதாக கூறப்படுகிறது. இதற்குப் பழிக்குப் பழியாக உயிரை வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு விரலை வெட்டிய பாஜக நிர்வாகியை, அதே நாளில் வெட்டிக் கொலை செய்தனர்.