அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயன்ற அதிமுகவினர் கைது

53பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தரக்குறைவாக அவதூறாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசியதாக அதை கண்டிக்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக தொழில்நுட்ப பிரித் மண்டல செயலாளர் சிவா ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென அண்ணாமலையின் உருவெப்போம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றதால் போலீசார் அதனை தடுத்து உருவ பொம்மையை பிடுங்கி சென்றனர். இதற்கு இடையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு உருவப் பொம்மையை எரிக்க முயன்ற 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி