ஐபிஎல் தொடருக்கான உரிமையை தக்க வைத்தது டாடா நிறுவனம்

74பார்த்தது
ஐபிஎல் தொடருக்கான உரிமையை தக்க வைத்தது டாடா நிறுவனம்
ஐபிஎல் தொடருக்கான டைட்டில் உரிமையை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது. வரும் 2028ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமம் முதலில் 2022ஆம் ஆண்டில் ஐபிஎல் டைட்டில் உரிமையைப் பெற்றது. உலகின் மிகவும் பிரபலமான டி20 கிரிக்கெட் லீக்கின் 17வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இதில், சென்னை, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, குஜராத் அணிகள் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்தி