தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை

81பார்த்தது
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 389.2 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 328.5 மி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி