“குழந்தைகளின் கல்வி செலவை தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கும்”

63பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும்" என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி