“கைதானவருக்கும் தவெக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”

81பார்த்தது
“கைதானவருக்கும் தவெக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”
கரூர் மாவட்டம் குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என செய்திகள் வந்தன. இந்நிலையில், “கைது செய்யப்பட்ட ராஜாவிற்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதுவரை அவர் எந்த பொறுப்பிலும் இல்லை” என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.