தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றளவும் விரும்பக்கூடிய நடிகராக இருப்பவர் டி. ராஜேந்தர். இவர், கடந்தாண்டு உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருடன் இருந்து சிம்பு பார்த்துக்கொண்டார். சிகிச்சைக்கு பின் இந்தியா திரும்பியவர் அதிகம் சினிமா நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் டி. ராஜேந்தர் கலந்துகொண்டார். தலையில் முடி கொட்டி, பொறுமையாக நடந்து வந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வேதனையடைந்தனர்.