சட்டமன்ற தேர்தல்-2026 வருவதையொட்டி, அதிமுக மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஒரே நேரத்தில், அனைத்து நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக இந்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். மேலும், தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க வலியுறுத்தியுள்ளார். கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.