கோழித் தீவன முட்டைகள் சரிந்து குழந்தைகள் பலி

53பார்த்தது
கோழித் தீவன முட்டைகள் சரிந்து குழந்தைகள் பலி
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையை அடுத்த கோபச்சந்திரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது கோழிப் பண்ணையில் பீகாரைச் சேர்ந்த முகமது ஜகவுல்லா தனது குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். இவர்களது குழந்தைகள் சார்பானு (4), ஆயுத் காதூன் (3) இருவரும் வெள்ளிக்கிழமை கோழிப் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த கோழித் தீவன மூட்டைகள் சரிந்து விழுந்ததில் இரு குழந்தைகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி