மரக்கடையில் தீ விபத்து.. பல கோடி மதிப்பிலான மரங்கள் நாசம்

55பார்த்தது
தூத்துக்குடி திருச்செந்தூரில் உள்ள மரக்கடையில் இன்று (அக்.26) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி