தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சுன்னம்பட்டிவாடா பகுதியைச் சேர்ந்த தல்லாபள்ளி பிரசாத் என்பவரை தெருநாய் ஒன்று கடிக்க முயன்றது. அப்போது தனது கைகளால் தடுக்க முயன்ற அவரது கட்டை விரலை நாய் கடித்தது. இதனால், அலறிய பிரசாத்தைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், அந்த தெருநாயை விரட்ட முயன்றனர். ஆனால், அவர்களில் நான்கு பேரையும் நாய் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.