செவ்வாய்க்கிழமையில் இத்தனை சிறப்பா.. வெற்றி உறுதி!

8032பார்த்தது
செவ்வாய்க்கிழமையில் இத்தனை சிறப்பா.. வெற்றி உறுதி!
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பு இன்றி இளைஞர்கள் பலர் கிடைத்த வேலையை திருப்தி இன்றி செய்வதுண்டு. சிலர் அந்த வேலை கூட கிடைக்காமல் வாழ்வா சாவா என போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வேலையின்றி தவிப்பவர்களுக்கு ஆன்மீகத்தில் சரியான வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமைகளில் காலையிலேயே குளித்துவிட்டு, அனுமனையும், ஸ்ரீராமரையும் வழிபாடு செய்ய வேண்டும். வெற்றிலை மாலை அணிவித்து அனுமனுக்கு அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பு.

இதுபோல தொடர்ந்து செய்து வரும் போது நிச்சயம் நாம் நினைத்த வேலைவாய்ப்பு அமையும். அதே போல், பணியிட மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என தொழில் சம்பந்தமான முன்னேற்றம் உறுதியாக இருக்கும் என ஆன்மீகவாதிகள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி