சிவகங்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் அனுசரிப்பு

73பார்த்தது
ஆங்கிலேயரை எதிர்த்து தூக்குக்கயிறை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு
சிவகங்கை அரண்மனைவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு, சிவகங்கை நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மாவட்டத்தலைவர் சந்தானகிருஷ்ணன், நகர் தலைவர் தசரதன், இளைஞரணித்தலைவர் சரவணன், சிவகங்கை தமிழ்ச்சங்க நிறுவனத்தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் முத்துக்கண்ணன், ஹரிபாஸ்கர், தாய் இல்ல இயக்குனர் புஷ்பராஜ், உறுப்பினர்கள் இளையராஜா, நாகேஷ், முருகானந்தம், நாகராஜன், கார்த்தி, தியாகு, திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இன்று மாலை சுமார் 5 மணி வரை மலரஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி