அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

67பார்த்தது
சிவகங்கை அருகே கரும்பாவூர் கிராமத்தில் உள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 12 மாடுகளும், 108 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வட்டமாக அமைக்கப்பட்டுள்ள திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையினை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும் என நிர்ணைக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசும், பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியினை சிவகங்கை, கரும்பாவூர், சித்தலூர், படமாத்தூர் நல்லாகுளம் , நாட்டாகுடி மற்றும் உடைநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக இப் போட்டியினை கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி