தூய்மை பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவில்லை என புகார்

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சியில் சுமார் 30 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர் இந்நிலையில் ஒன்பது துப்புரவு பணியாளர்கள் மட்டுமே நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் அதில் ஒன்பது நபர்களில் மூன்று நபர்கள் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றுள்ளனர் ஒவ்வொரு துப்புறவு பணியாளர்களுக்கு குறைந்தது சுமார் ரூ 40 ஆயிரம் வரை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் 2018 லிருந்து 2021 ஆம் ஆண்டு வரை கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையென சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி