பல துறை அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார்.

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றதுஇந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், வருவாய்த்துறை, போன்ற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் பொதுமக்கள் குறைகளை கேட்பதற்கு இங்கு வருவதில்லை என்று தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய தலைவர் பதிலளித்தார்.

மேலும் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆகியும், பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றி தராமல் இருப்பதாகவும், அதனை உடனடியாக நிறைவேற்றி தரும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் கவுன்சிலர்கள் முறையிட்டனர். கூடிய விரைவில் நிதி ஒதுக்கிய பிறகு அனைத்து விதமான அடிப்படை பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பதிலளித்தார்.
இந்தக் கூட்டமானது மதியம் மூன்று மணி வரை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி