மின்சாரம் பாய்ந்து சர்க்கஸ் கலைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் முத்துராமன் இவருக்கு வயது 22. இவரது மனைவி சுமித்ரா. இருவருக்கும் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாகிறது. இவர் வளர்க்கும் குதிரை, ஒட்டகத்தை வைத்துக்கொண்டு கிராமம் கிராமங்களாக சென்று சர்க்கஸ் நடத்துவதின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களாக மதகுபட்டியை அடுத்த கீழப்பூங்குடி அரசு மேல்நிலை பள்ளி அருகே கூடாரம் அமைத்து அப்பகுதியில் சர்க்கஸ் நடத்திவந்துள்ளார். இந்நிலையில் தான் வளர்த்துவரும் ஒட்டகத்திற்கு அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி இழைகளை பறித்துள்ளார். அச்சமயம் வேப்பமரத்திற்கு மேல் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் இவரது கை பட்டநிலையில் தூக்கி எறியப்பட்டார் உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் வைத்துள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து மதகுபட்டி காவல்துறையினர் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி