அகரம் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு இளைஞர் குத்தி கொலை

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (25) இவர் அப்பகுதியில் உள்ள மந்தை அம்மன் கோவிலில் இவரது உறவினர்கள் சாமியாடுவதற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்து சாமி ஆடுவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கும் இவரின் உறவினர்களான அஜித் குமார் வயது 24 ராஜேஷ் கண்ணன், கார்த்திக் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது ஜெயபிரகாஷை மூன்று பேரும் கத்தியால் குத்தியதாக சொல்லப்படும் நிலையில் கத்தியால் குத்துப்பட்ட ஜெயபிரகாஷ் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மேலும் இச்சம்பம் குறித்து திருப்புவன போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அஜித்குமார், ராஜேஷ் கண்ணன் , ஆகிய இருவரையும் கைது செய்து தப்பி ஓடிய கார்த்திக்கை இன்று இரவு சுமார் 9 மணி அளவில் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி