கனமழை: கர்ப்பிணிகளின் நிலை என்ன? விளக்கும் அதிகாரி

55பார்த்தது
கனமழை: கர்ப்பிணிகளின் நிலை என்ன? விளக்கும் அதிகாரி
பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும், “அனைத்து மாவட்டங்களிலும், பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகள் முன்கூட்டியே பாதுகாப்பு கருதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி