பிணையில் வந்த கஞ்சா வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார்ஊரணியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மனோஜ் குமார் 23. இவர் கடந்த ஆண்டு குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் காரைக்குடி 100 அடி சாலையில் வந்தபோது, பின்னால் காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை காரில் வந்த இளைஞர்கள் அறிவாலால் சரமாரி மூவரையும் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டினர். இதில் ஒருவர் தப்பிய நிலையில், இதில் படுகாயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் மற்றோருக்கு காலில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கொலை செய்த மர்ம கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது. சம்பவம் அறிந்து வந்த காரைக்குடி வடக்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த மனோஜ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 100 அடி சாலை பகுதியில் பட்டப் பகலில் ரவுடியை ஓட ஓட வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி