கடுமையான விலை உயர்வு: தலை சுற்ற வைக்கும் மல்லிகைப்பூ..!

74பார்த்தது
கடுமையான விலை உயர்வு: தலை சுற்ற வைக்கும் மல்லிகைப்பூ..!
மல்லிகைப் பூவின் வரத்து பெருமளவு குறைந்துள்ளதாலும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலும், தொடர் முகூர்த்த தினங்களை முன்னிட்டும் மல்லிகை பூவின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்து சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை ரூ.700க்கும், அதிகபட்சமாக ரூ.800க்கும் விற்பனையாகி வந்த நிலையில், இன்று (ஜூன் 16) திடீரென ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு பூ வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி