“தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைப்பு” - ராகுல் கண்டனம்

83பார்த்தது
“தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைப்பு” - ராகுல் கண்டனம்
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜக மீது கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "பீகார் மாநிலம் நவடா பகுதியில் தலித்துகளுக்கு சொந்தமான 80க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. உடை, தங்கும் இடம் எதுவும் இல்லாமல் தலித் மக்கள் அந்த பகுதியில் பரிதவிக்கின்றனர். இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பிறகும் பிரதமர் மௌனமாக இருக்கிறார். இவர்களின் அமைதி தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு உந்துதலாக இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி