சிரித்த முகத்துடன் வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி

65பார்த்தது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (செப்.26) உத்தரவிட்டது. ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து தற்போது வெளியில் வந்தார். சிரித்த முகத்துடன் வெளியே வந்த அவரை, திமுக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி