சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட ஜோடி

60பார்த்தது
அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னை பெரியார் திடலில் காதல் ஜோடி, சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். இது குறித்து பேசிய மணமகன் தேவேந்திரன், “கொளத்தூர் மணி, நல்லக்கண்ணு தலைமையில் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள். சமூகத்தில் பறை இசை துக்க நிகழ்ச்சிகளுக்கு தான் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதை கொண்டாட்டத்துக்கும் பயன்படுத்தலாம் என காட்டியுள்ளோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி