2016ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இதனுடன் கேஸ் அடுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பிபிஎல் கார்டு வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பலன்களைப் பெற முடியும். இந்த திட்டத்தினை பெற பெண்கள் ஏற்கனவே கேஸ் இணைப்பு வைத்திருக்கக்கூடாது. இத்திட்டத்தின் பலன்களைப் பெற, ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பத்தை அளிக்கலாம். www.pmuy.gov.in என்ற வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்தமான கேஸ் ஏஜென்சியில் கொடுத்து பயன்பெறலாம்.