வாழைக் குலையை போட்டி போட்டுக் கொண்டு பறித்துச் சென்ற மக்கள்

589பார்த்தது
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த வாழைக் குலையை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பறித்துச் சென்றனர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் நேற்று(ஏப்ரல் 13) இரவு நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஆங்காங்கே வாழை மரங்கள் குலையுடன் கட்டப்பட்டிருந்தது. பிரச்சாரம் முடிவதற்கு முன்பாகவே மக்கள் வாழைக்குலையை அக்கு அக்காக பிரித்து எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி