வெள்ளப்பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

71750பார்த்தது
வெள்ளப்பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் நாளை (டிசம்பர் 21) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும் வெல்ல நிவாரண முகாம்கள் நடைபெறாத கல்லூரிகள் இயங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை முதல் மெல்ல மெல்ல பள்ளிகளை திறக்க ஆய்வுக்கு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.