இளம்பிள்ளையைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் கின்னஸ் உலக சாதனை

4646பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி-வளர்மதி ஆகியோரின் மகன் சக்தி (28). சிவில் இன்ஜினியர் முடித்த இவர்  ஒரு நிமிடத்தில் உடலை சுற்றி கயிறு இல்லாமல் இரு கைகளினால் பின்னோக்கி்கிப்பிங் செய்து மூன்றாவது முறையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது இத்தாலியின் மிலன் நகரில் ஒரு நிமிடத்தில் 49 ஸ்கிப்களை நிகழ்த்தி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தார். இதே போல் கடந்த 2018-ல் ரோம் நகரில் 48 ஸ்கிப்களையும், 2015-ல் கோயம்புத்தூரில் 46 ஸ்கிப்களையும் நிகழ்த்தி முதல் மற்றும் இராண்டாவது முறையாக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று வருவது குறித்து இவருக்கு பாராட்டுதல்கள்  குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி