சித்தர் கோயிலில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சித்தர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள காந்தி சிலை அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், நகரத் தலைவர் சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜமுத்து , முன்னாள் வட்டார தலைவர் நீலமேகம் , கராத்தே ராஜா , குழந்தை, லோகு, ஜோசப், முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.