அரசு கலைகல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு

68பார்த்தது
தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகளில் நேற்று முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. சேலம் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து முதன் முறையாக கல்லூரிகளுக்கு வரும் உற்சாகத்தில் மாணவ, மாணவிகள் வந்தனர். முதல் நாள் என்பதால் சில மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர்.
அவர்களை நுழைவு வாயிலில் நின்று கொண்டு முதல்வர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் சீனியர் மாணவர்கள் ஆகியோர் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.
சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக என். சி. சி. , என். எஸ். எஸ். மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.
இதையடுத்து கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி, மாணவ, மாணவிகளுக்கு கை கொடுத்தும், ரோஜா பூ மற்றும் இனிப்பு கொடுத்தும் வரவேற்றார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி