ஓமலூரில் தொடர் திருட்டு சம்பவங்களால் பரபரப்பு

1876பார்த்தது
ஓமலூர் பகுதிகளில் முகமூடி அணிந்து வந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை ஓமலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓமலூர் - சேலம் மெயின் ரோட்டில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையின் உரிமையாளர் நேற்று முன்தினம் காலை கடையை திறந்து உள்ளே சென்றபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரத்தை காணவில்லை.

தொடர்ந்து சிசிடிவி கேமரா கட்சிகளை ஆய்வு செய்தபோது மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய கொள்ளையன் கடையின் கல்லா பெட்டியில் உள்ள பணத்தையும், சுவாமி படம் அருகில் உள்ள பெட்டியில் உள்ள பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு குளிர்சாதன பெட்டியிலிருந்து குளிர்பானம் எடுத்து அருந்திவிட்டு நிதானமாக திருடி சென்றதும், இதனைதொடர்ந்து அருகிலுள்ள மீன்கடை, தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டியில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து தெரியவந்தது.

24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைப்பெற்ற நிலையில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி