சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாப்பார முனியப்பன் திருக்கோவில் ஆடித் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை அக்ரஹாரம் சரபங்கா ஆற்றுப்படுகையில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் சுவாமி ஊர்வலம் மற்றும் சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து அக்னி கரகம், பூங்கரகம், அழகு குத்துதல் போன்ற பக்தர்களின் நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி மாலை நடைபெறயுள்ளது.