எடப்பாடி; ஆடி18 சுவாமிகளுக்கு காவிரிக் கரையில் தீர்த்தவாரி!

58பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஆடி-18, யை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பல்வேறு திருக்கோவில்களில் இருந்து காவிரிக் கரையில் தீர்த்தவாரிக்கு புறப்பாடு நடைபெற்றன.

இதனையடுத்து நேற்று ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பில்லுக்குறிச்சி கிழக்கு கால்வாயில் பல்வேறு கோவில்களின் உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரிக்கு கொண்டுவரப்பட்டு காவிரி நீரில் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை செய்து ஊர்வலமாக திருக்கோயிலுக்கு புறப்பட்டு சென்றன.

தொடர்ந்து பக்தர்கள் நீராடி காவிரி கரையில் சிறப்பு பூஜைகள் செய்தும் மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி