ஆறு இடங்களில் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

1876பார்த்தது
ஆத்தூரில் மளிகை கடை, பீடா கடை உள்ளிட்ட ஆறு இடங்களில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதியில் ரயில் நிலையம் அருகில் அய்யாவு என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. இந்தக் கடையில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியை உடைத்து சாலையில் வீசி சென்றனர். வேறொரு இடத்தில் ரொக்கம் மற்றும் செல்போன் வைத்திருந்ததால் தப்பியது. அதேபோல் காந்திநகர் நகராட்சி சிறுவர் பூங்கா எதிரே உள்ள டீக்கடை, சலூன் கடை, பீடா கடை என ஐந்து கடைகளில் வெளிப்புற பூட்டை உடைத்துள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி